புதன், 9 ஜூன், 2010

அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கை பலகை


இது என்னுடைய முதல் அமெரிக்க பயணத்தின் அனுபவம். மிகவும் வளர்ந்த நாடு என்று அழைகின்றார்களே என்ன தான் அப்படி இருகின்றது என்று காண்பதிலும் ஒரு ஆர்வம். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் வந்திறங்கினேன். குடிநுழைவு பகுதியை முடித்து விட்டு வெளியில் வந்தவுடன் ஒரு பரபரப்பான வாழ்க்கை வெளியே.


வெளியில் வரும்போது என்னுடைய பெயர் பலகையை கொண்டு என்னை அழைத்து செல்வதற்காக காத்திருந்தார் அந்த வாகன ஓட்டுனர். "Welcome to America" என்ற அழைப்புடன் தங்கும் விடுதிக்கு அழைத்து சென்றார். அங்கு இறங்கி அவரிடம் விடைபெற்று தங்கும் விடுதிக்கு சென்றேன்.

விடுதிக்கு முன் ஒரு எச்சரிக்கை பலகை இருந்தது. அதன் புகைப்படம் கீழே.



அதில் எழுதி இருப்பதாவது, இந்த பகுதியில் உள்ள இரசாயான பொருள்களினால் பிறப்பு குறைகள் மற்றும் இனபெருக்கை சம்பந்தாமான குறைகள், மற்றும் புற்று நோய் ஏற்பட காரணாமாக அமையலாம்.

பிழைப்புக்காக வந்த இடத்தில் என்னடா இந்த சோதனை அன்று மனதில் கொண்டு அந்த தங்கும் விடுதி வரவேற்ப்பு அதிகாரியிடம், இந்த எச்சரிக்கை பலகையில் எழுதி இருப்பது சரிதானா? என்று கேட்டேன்(மனதிற்குள் என்னடா இப்படி ஒரு மட்டமான ஒரு தங்கும் விடுதியில் தங்க வைத்துள்ளார்களே என்று ஒரு சந்தேகமும் கூட). அவர் மிகவும் அதிகம் சட்டம் பயின்றால் இந்த சூழ்நிலை தான் என்றார். மேலும் அதில் எழுதி இருப்பது உண்மை எனவும் கூறினார். உடன் எனது கல்லூரி நண்பருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன், "என்னடா இப்படி எச்சரிக்கை பலகை உள்ளதே"  இந்த விடுதியில் தங்குவதில் ஒன்றும் பிரச்னை இல்லையே என்று கேட்டேன். நண்பரும் அது எல்லா இடங்களிலும் உள்ள பலகை தான் ஒன்றும் பிரச்னை இல்லை என்றார். ஒரு வழியாக மனதை தேர்த்தி கொண்டு தங்கும் விடுதிக்குள் நுழைந்தேன். 

மறுநாள் காலை எழுந்து அலுவலகத்திற்கு சென்றேன். அங்கும் இது போன்ற எச்சரிக்கை  பலகை. ஊருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வந்து சேர்ந்ததை தெரிவித்தேன். மேலும் இது போன்று எச்சரிக்கை பலகை இருப்பதையும் சொன்னேன். வீட்டில் அனைவரும் போதுமப்பா சீக்கிரம் வந்துவிடு, முதலுக்கே மோசம் வந்திட போகுதே என்று அறிவுரை. ஒரு வழியாக சமாளித்து தொலைபேசி தொடர்பை முடித்து விட்டேன்.

தெரிந்த நண்பர்களிடம் கேட்டேன், அலுவலத்திலும் கேட்டேன். அனைவரும் எனக்கு ஒன்றும் திருப்தி அளிக்கும் வகையில் பதில் தரவில்லை.

இணையத்தில் தேட தொடங்கினேன். விபரங்கள் அனைத்தும் கிடைத்தது.

இது எல்லா இடங்களிலும் உள்ள இரசாயன பொருட்களுக்கு உள்ள எச்சரிக்கை. இந்த மாநிலத்தில் எச்சிரிக்கை பலகை உள்ளது, மற்ற இடங்களில் எச்சரிக்கை பலகை இல்லை. ஆனால் அதில் கூறப்பட்டுள்ள இரசாயான பொருட்கள் எல்லா இடங்களிலும் உள்ளது என்பதை கண்டறிந்தேன். அதிர்ச்சியுற்றேன் அது நம் கிராமத்திலும் அன்றாட வாழ்க்கை முறைகளிலும் பயன்படுத்தப்படும் பொருட்களில் உள்ளது. (பிளாஸ்டிக் பொருட்கள், Aspirin மாத்திரைகள், Asbestos போன்று நவீன வாழ்க்கை வசதி ஏற்படுத்தி தந்த பொருட்களும் அடங்கும்)

கலிபோர்னியா மாநிலம் அந்த இரசயான பொருட்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் அதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


2010 ஆம் ஆண்டின் புதிபிக்கபட்ட பட்டியல்.

http://oehha.ca.gov/prop65/prop65_list/files/P65single052010.pdf

படித்த பிறகு அப்படா இது உலகெங்கிலும் உள்ளது, இங்கு தெளிவாக விளக்கி உள்ளார்கள் மற்றபடி ஒன்றும் புதிதாக இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். மேலும் ஒவ்வொரு வருடமும் இப்பட்டியலில் பல இரசாயான பொருட்கள் செர்க்கபடுகின்றது. நம் கிராம மக்களும் இதை பற்றி தெரிந்து கொண்டு பயன் பெறலாமே.

பல்வேறு காரணங்களால் கிராமத்தில் தற்போது இயற்க்கை முறையில் குழந்தை பெற்று கொள்ளும் திறன் குறைந்து கொண்டே வருகின்றது. இங்கு கூறப்பட்டுள்ள இரசாயான பொருட்கள் கிராமத்திலும் பயன்பாட்டில் இருப்பதால் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாமோ?


செவ்வாய், 1 ஜூன், 2010

மின்படிப்பியும் நூலகமும்

சமீபத்தில் கிராமத்தின் தேவைகளில் இலக்க முறை நூலகம் பற்றி பேசினோம். விஞ்ஞான வளர்ச்சியில் நூலகத்தையே (320 கிராம்) கையில் எடுத்து செல்லும் வசதி மின் படிப்பியால் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் அருகாமையிலுள்ள "Barnes & Noble" (பார்ன்ஸ் & நோபெல்) புத்தக கடைகளில் "nook" (நூக்) மின்படிப்பியை பயன்படுத்தி பார்க்கலாமே என்று வாங்கினேன்.

படிப்பதற்கு மிகவும் பயனுள்ள கருவியாக உள்ளது. தமிழ் புத்தகங்களை படிக்க முடியுமா என்று ஒரு கேள்வி!. "பொன்னியன் செல்வன்" தமிழ் மின்புத்தகத்தை அக்கருவியில் சேர்த்தேன். மிகவும் தெளிவான எழுத்தகளுடன் படிக்க முடிந்தது. அந்த கருவியில் உள்ள தமிழ் புத்தகத்தை கீழே காணலாம்.


மேலும் இந்த கருவி மூலம், தினசரி நாளிதழ்கள், தேவைப்படும் புத்தகங்கள் மூன்றாம் தலைமுறை (3G) தொடர்பு மூலம் இந்த கருவிக்கு கிடைக்கும். இந்த சேவைகள் வேண்டுமெனின் மேலும் நீங்கள் அச்சேவைகளில் சந்தாதாராக ஆக வேண்டும். உலகத்தில் இணையத்தில் கிடைக்கும் புத்தகங்கள் அனைத்தையும் நொடியில் வாங்கும் வசதி.

மேலும் படிக்கும் போது குறிப்பு எடுத்து கொள்ள வேண்டுமெனின் விசைபலகை மூலம் குறிப்புகளை எடுத்து கொள்ளலாம்.

வளர்ந்த நாடுகளில் தேவைபடுகிறதோ இல்லையோ, அவசியம் நம் கிராமத்திற்கு தேவைப்படும் என எண்ணுகிறேன். ஏனெனில் தேவைப்படும் புத்தகங்கள், நாழிதல்கள் உடனுக்குடன் கிடைப்பதில்லை. இது போன்ற கருவிகள் மூலம் அந்த தேவைகள் தீர்க்கபடுகின்றது.

மேலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் படித்து சோர்ந்தது போனார்களோ இல்லையோ, புத்தக மூட்டை தூக்கியே சோர்ந்து போனார்கள். இது போன்ற கருவிகள் புத்தக மூட்டைகளை தூக்குவதை தவிர்த்து, படிப்பில் அதிக கவனம் செலுத்த உதவும். தமிழக அரசின் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பாட புத்தகங்களையும் இதில் படிக்கலாம்.

மேலும் பேப்பர் தயாரிக்க வெட்டப்படும் மரங்களை தடுக்க இது உதவும்.

மேலும், மடிகணிகளை (Laptop) விட இரு விதத்தில் இது மேம்பட்டு உள்ளது,

  1. இரண்டு வாரங்களுக்கு வடுக்குகளுக்கு மின்னேற்றம் (Battery charge) செய்ய தேவை இல்லை.
  2. பேப்பர் போன்று (eInk) காட்சி அளிக்கும் கருவி. நீண்ட நேரம் கண் உறுத்தாமல் படிக்க உதவும்.

இது போன்று பல மின்படிப்பிகள் தற்போது வெளிவந்துள்ளது. அவற்றில் சில,

Amazon Kindle
Barnes & Noble Nook
Kobo
Apple Ipad

படிப்பிகளின் ஒப்பீடு பற்றி இங்கே  தெரிந்து கொள்ளலாம்.