புதன், 9 ஜூன், 2010

அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கை பலகை


இது என்னுடைய முதல் அமெரிக்க பயணத்தின் அனுபவம். மிகவும் வளர்ந்த நாடு என்று அழைகின்றார்களே என்ன தான் அப்படி இருகின்றது என்று காண்பதிலும் ஒரு ஆர்வம். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் வந்திறங்கினேன். குடிநுழைவு பகுதியை முடித்து விட்டு வெளியில் வந்தவுடன் ஒரு பரபரப்பான வாழ்க்கை வெளியே.


வெளியில் வரும்போது என்னுடைய பெயர் பலகையை கொண்டு என்னை அழைத்து செல்வதற்காக காத்திருந்தார் அந்த வாகன ஓட்டுனர். "Welcome to America" என்ற அழைப்புடன் தங்கும் விடுதிக்கு அழைத்து சென்றார். அங்கு இறங்கி அவரிடம் விடைபெற்று தங்கும் விடுதிக்கு சென்றேன்.

விடுதிக்கு முன் ஒரு எச்சரிக்கை பலகை இருந்தது. அதன் புகைப்படம் கீழே.



அதில் எழுதி இருப்பதாவது, இந்த பகுதியில் உள்ள இரசாயான பொருள்களினால் பிறப்பு குறைகள் மற்றும் இனபெருக்கை சம்பந்தாமான குறைகள், மற்றும் புற்று நோய் ஏற்பட காரணாமாக அமையலாம்.

பிழைப்புக்காக வந்த இடத்தில் என்னடா இந்த சோதனை அன்று மனதில் கொண்டு அந்த தங்கும் விடுதி வரவேற்ப்பு அதிகாரியிடம், இந்த எச்சரிக்கை பலகையில் எழுதி இருப்பது சரிதானா? என்று கேட்டேன்(மனதிற்குள் என்னடா இப்படி ஒரு மட்டமான ஒரு தங்கும் விடுதியில் தங்க வைத்துள்ளார்களே என்று ஒரு சந்தேகமும் கூட). அவர் மிகவும் அதிகம் சட்டம் பயின்றால் இந்த சூழ்நிலை தான் என்றார். மேலும் அதில் எழுதி இருப்பது உண்மை எனவும் கூறினார். உடன் எனது கல்லூரி நண்பருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன், "என்னடா இப்படி எச்சரிக்கை பலகை உள்ளதே"  இந்த விடுதியில் தங்குவதில் ஒன்றும் பிரச்னை இல்லையே என்று கேட்டேன். நண்பரும் அது எல்லா இடங்களிலும் உள்ள பலகை தான் ஒன்றும் பிரச்னை இல்லை என்றார். ஒரு வழியாக மனதை தேர்த்தி கொண்டு தங்கும் விடுதிக்குள் நுழைந்தேன். 

மறுநாள் காலை எழுந்து அலுவலகத்திற்கு சென்றேன். அங்கும் இது போன்ற எச்சரிக்கை  பலகை. ஊருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வந்து சேர்ந்ததை தெரிவித்தேன். மேலும் இது போன்று எச்சரிக்கை பலகை இருப்பதையும் சொன்னேன். வீட்டில் அனைவரும் போதுமப்பா சீக்கிரம் வந்துவிடு, முதலுக்கே மோசம் வந்திட போகுதே என்று அறிவுரை. ஒரு வழியாக சமாளித்து தொலைபேசி தொடர்பை முடித்து விட்டேன்.

தெரிந்த நண்பர்களிடம் கேட்டேன், அலுவலத்திலும் கேட்டேன். அனைவரும் எனக்கு ஒன்றும் திருப்தி அளிக்கும் வகையில் பதில் தரவில்லை.

இணையத்தில் தேட தொடங்கினேன். விபரங்கள் அனைத்தும் கிடைத்தது.

இது எல்லா இடங்களிலும் உள்ள இரசாயன பொருட்களுக்கு உள்ள எச்சரிக்கை. இந்த மாநிலத்தில் எச்சிரிக்கை பலகை உள்ளது, மற்ற இடங்களில் எச்சரிக்கை பலகை இல்லை. ஆனால் அதில் கூறப்பட்டுள்ள இரசாயான பொருட்கள் எல்லா இடங்களிலும் உள்ளது என்பதை கண்டறிந்தேன். அதிர்ச்சியுற்றேன் அது நம் கிராமத்திலும் அன்றாட வாழ்க்கை முறைகளிலும் பயன்படுத்தப்படும் பொருட்களில் உள்ளது. (பிளாஸ்டிக் பொருட்கள், Aspirin மாத்திரைகள், Asbestos போன்று நவீன வாழ்க்கை வசதி ஏற்படுத்தி தந்த பொருட்களும் அடங்கும்)

கலிபோர்னியா மாநிலம் அந்த இரசயான பொருட்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் அதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


2010 ஆம் ஆண்டின் புதிபிக்கபட்ட பட்டியல்.

http://oehha.ca.gov/prop65/prop65_list/files/P65single052010.pdf

படித்த பிறகு அப்படா இது உலகெங்கிலும் உள்ளது, இங்கு தெளிவாக விளக்கி உள்ளார்கள் மற்றபடி ஒன்றும் புதிதாக இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். மேலும் ஒவ்வொரு வருடமும் இப்பட்டியலில் பல இரசாயான பொருட்கள் செர்க்கபடுகின்றது. நம் கிராம மக்களும் இதை பற்றி தெரிந்து கொண்டு பயன் பெறலாமே.

பல்வேறு காரணங்களால் கிராமத்தில் தற்போது இயற்க்கை முறையில் குழந்தை பெற்று கொள்ளும் திறன் குறைந்து கொண்டே வருகின்றது. இங்கு கூறப்பட்டுள்ள இரசாயான பொருட்கள் கிராமத்திலும் பயன்பாட்டில் இருப்பதால் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாமோ?


செவ்வாய், 1 ஜூன், 2010

மின்படிப்பியும் நூலகமும்

சமீபத்தில் கிராமத்தின் தேவைகளில் இலக்க முறை நூலகம் பற்றி பேசினோம். விஞ்ஞான வளர்ச்சியில் நூலகத்தையே (320 கிராம்) கையில் எடுத்து செல்லும் வசதி மின் படிப்பியால் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் அருகாமையிலுள்ள "Barnes & Noble" (பார்ன்ஸ் & நோபெல்) புத்தக கடைகளில் "nook" (நூக்) மின்படிப்பியை பயன்படுத்தி பார்க்கலாமே என்று வாங்கினேன்.

படிப்பதற்கு மிகவும் பயனுள்ள கருவியாக உள்ளது. தமிழ் புத்தகங்களை படிக்க முடியுமா என்று ஒரு கேள்வி!. "பொன்னியன் செல்வன்" தமிழ் மின்புத்தகத்தை அக்கருவியில் சேர்த்தேன். மிகவும் தெளிவான எழுத்தகளுடன் படிக்க முடிந்தது. அந்த கருவியில் உள்ள தமிழ் புத்தகத்தை கீழே காணலாம்.


மேலும் இந்த கருவி மூலம், தினசரி நாளிதழ்கள், தேவைப்படும் புத்தகங்கள் மூன்றாம் தலைமுறை (3G) தொடர்பு மூலம் இந்த கருவிக்கு கிடைக்கும். இந்த சேவைகள் வேண்டுமெனின் மேலும் நீங்கள் அச்சேவைகளில் சந்தாதாராக ஆக வேண்டும். உலகத்தில் இணையத்தில் கிடைக்கும் புத்தகங்கள் அனைத்தையும் நொடியில் வாங்கும் வசதி.

மேலும் படிக்கும் போது குறிப்பு எடுத்து கொள்ள வேண்டுமெனின் விசைபலகை மூலம் குறிப்புகளை எடுத்து கொள்ளலாம்.

வளர்ந்த நாடுகளில் தேவைபடுகிறதோ இல்லையோ, அவசியம் நம் கிராமத்திற்கு தேவைப்படும் என எண்ணுகிறேன். ஏனெனில் தேவைப்படும் புத்தகங்கள், நாழிதல்கள் உடனுக்குடன் கிடைப்பதில்லை. இது போன்ற கருவிகள் மூலம் அந்த தேவைகள் தீர்க்கபடுகின்றது.

மேலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் படித்து சோர்ந்தது போனார்களோ இல்லையோ, புத்தக மூட்டை தூக்கியே சோர்ந்து போனார்கள். இது போன்ற கருவிகள் புத்தக மூட்டைகளை தூக்குவதை தவிர்த்து, படிப்பில் அதிக கவனம் செலுத்த உதவும். தமிழக அரசின் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பாட புத்தகங்களையும் இதில் படிக்கலாம்.

மேலும் பேப்பர் தயாரிக்க வெட்டப்படும் மரங்களை தடுக்க இது உதவும்.

மேலும், மடிகணிகளை (Laptop) விட இரு விதத்தில் இது மேம்பட்டு உள்ளது,

  1. இரண்டு வாரங்களுக்கு வடுக்குகளுக்கு மின்னேற்றம் (Battery charge) செய்ய தேவை இல்லை.
  2. பேப்பர் போன்று (eInk) காட்சி அளிக்கும் கருவி. நீண்ட நேரம் கண் உறுத்தாமல் படிக்க உதவும்.

இது போன்று பல மின்படிப்பிகள் தற்போது வெளிவந்துள்ளது. அவற்றில் சில,

Amazon Kindle
Barnes & Noble Nook
Kobo
Apple Ipad

படிப்பிகளின் ஒப்பீடு பற்றி இங்கே  தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாய், 9 மார்ச், 2010

அமெரிக்க அரசாங்கத்தின் தமிழ் படிவம்

இன்று மக்கள் தொகை கணக்கெடுப்பிர்க்காக அமெரிக்க அரசாங்கத்தில் இருந்து படிவம் வந்திருந்தது. படிவத்தை தமிழில் கண்டவுடன் அச்சிரியமடைந்தேன். கீழே அப்படிவத்தின் மொழி உதவி வழிகாட்டி.

http://2010.census.gov/2010census/pdf/LAG_Tamil.pdf

தமிழில் எளிமையாக புரிந்து கொள்ளும்படியான படிவம். நீங்களும் தான் பாருங்களேன். மேலும் 60 மொழிகளில் இந்த படிவம் வழங்கப்படுகிறது.

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

பாங்காக் விமான நிலையத்தில் - பாஸ்போர்ட் இல்லாமல்



நான்  சிங்கப்பூரில் இருந்து  தாய்லாந்திற்கு பணியின் காரணமாக முதல்முறையாக சென்றிருந்தேன்.  இந்தியர்களுக்கு தாய்லாந்தில் ON ARRIVAL விசா கிடைக்கும்  என்றும் , அலுவலகத்தில் பணி முடித்து  திரும்பி வர நான்கு வாரத்திற்கு பின்புகாண   திரும்புவற்கான (RETURN)  டிக்கெட் கொடுத்து. இருந்தார்கள் . தாய் விமானம் -  பாங்காக் விமான நிலையம் சென்று அடைந்த போது   மணி இரவு  11.30 . நீண்ட விசா வரிசைக்கு  பின் , விசா அலுவரிடம் எனது பாஸ் போர்ட் ,  திரும்புவற்கான (RETURN)  டிக்கெட் மற்ற தேவையான அடையாள சீட்டையும் கொடுத்த பின்பு தான் ,  விசா இரண்டு வாரங்களில் திரும்புவற்கான (RETURN) டிக்கெட் இருந்தால் தான் கிடைக்கும் என்று   தெரியவந்தது . நான் விமான நிலையதில் வைத்திருந்த டிக்கெட்டை இரண்டு  வாரத்திற்கு மாற்றலாம் என்றாலும் அப்போதைய சூழ்நிலையில் மாற்ற முடியவில்லை , காரணம் மணி இரவு  12ஐ கடந்திருந்தது. தாய் விமானம் சேவை பணியாளர்கள் வேலை முடிந்து சென்றுர்ந்தர்கள்  , அவர்கள் மறுநாள் காலை 7  மணி அளவில் தான் சேவையை தொடங்குவார்கள் என்று தெரியவந்தது. நான் மறுநாள் காலை  8 மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும்.. நான்  சிங்கப்பூரில் உள்ள எனது மேலாளரை தொடர்புக்கொண்டால் அவர் அடுத்தநாள் காலை வரை இருந்து டிக்கெட்டை மாற்றிக்கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.  அது எனது முதல் பயிற்சியளிக்கும் (CLIENT TRAINING)) பணி என்பதால் சற்று  கவலைஅடைந்தேன். அப்போது எனது அடுத்த விமானத்தில் வந்த மற்றொரு வாடிக்கையாளராய் (CLIENT) சந்திக்க நேர்ந்தது. அவரிடம் எனது நிலைமையை சொல்லி யோசனை  கேட்டேன். அதன் பின் அவரும் நானும் அங்கு திறந்து இருத்த மற்றொரு விமான சேவை அதிகாரியுடன் பேசி எதாவது வேறு வழி உள்ளதா என்று கேட்டோம்.அவரின் ஆலோசனைப்படி நான் எனது பாஸ் போர்ட்-யும் , டிக்கெட்-காண பணத்தையும்  விமான நிலையத்தில் வேலை செய்யும் ஒருவரிடம் கொடுத்தால், அவர் வெளிய சென்று புது டிக்கெட் எடுத்து வருவார்  என்று  தெரிய வந்தது. என்னிடம் கடன் அட்டை மற்றும் கொஞ்சம் பணம் தான் இருந்தது , அந்த நண்பர் (வாடிக்கையாளர் (Client) இப்போது நண்பராகி இருந்தார்) டிக்கெட்-காண மீதி பணத்தை கொடுத்தார் , வேறு வழியில்லாமல் விமான நிலையத்தில் வேலை செய்யும் அந்த நபரிடம் அதனை கொடுத்து அவர் வரும் வரை காதிருந்தேன், கிட்டதட்ட ஒரு மணி நேரம் கடந்தும்  அந்த நபரை காணவில்லை, கடைசியாக அவர் பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட்டுடன் வந்து சேர்த்தார் , வெளியில் டிக்கெட் கிடைக்காததால்  வேறு ஒரு இடம் சென்று வாங்கி வந்ததாக  சொன்னார். உதவி செய்த நபரிடம் நன்றியை தெருவித்து அவர் செய்த உதவிக்க கொஞ்சம் பணத்தையும் கொடுத்து  பின் விசா எடுத்து விமான நிலையத்தில்  இருந்து வெளிய  வந்தேன்.  
 சரியான நேரத்திற்கு சென்று என்னுடைய பணியையும் மிக சிறப்பாக முடித்து சிங்கப்பூர் திரும்பினேன். அந்த நண்பரின் நட்பு முன்று வருடங்களுக்கு பின்பும் தொடர்கிறது.....

அன்புடன்,
அருண்குமார் ராமலிங்கம்,
தவிடம்வீடு, தெற்குதெரு
காசாங்காடு

சனி, 20 பிப்ரவரி, 2010

நான் தொலைத்த பணப்பை - சுவாரசியமான அனுபவம்

சமீபத்தில் வீட்டருகில் உள்ள பூங்காவிற்கு மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதற்காக சென்றேன். அங்கு எதிர்பாராத விதமாக என்னுடைய பணப்பை (Wallet) தொலைந்து விட்டது.

அதில் உள்ள பொருட்களின் விபரம் கீழே,

75 - அமெரிக்கன் வெள்ளிகள், அனைத்து வங்கிகளின் கடன் அட்டைகள், பற்று அட்டைகள், வாகன ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டைகள் மேலும் முக்கிய முகவரிகள் மற்றும் முக்கிய தொலைபேசி எண்கள்.

தொலைத்தவுடன் என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த பூங்காவின் அலுவலகத்திற்கு சென்று கேட்டேன். என்னுடைய பணப்பை சம்பந்தமாக ஒன்றும் தெரியவில்லை என்று கைவிரித்து விட்டார்கள்.

அனைத்து வங்கிகளையும் அழைத்து வங்கி அட்டைகளை  மேலும் பயன்படுத்தாமல் இருக்க தடுத்து விட்டேன். மறுநாள் காலையில் ஓட்டுனர் உரிமம் அலுவலகத்திற்கு சென்று வேறு உரிமத்தை வங்கி விட்டேன். இதில் தொலைந்தது 75 அமெரிக்கன் வெள்ளிகள் தான். தொலைந்த வருத்தத்தில், அன்று ஒரு நாள் வங்கி அட்டை இல்லாமல் பொழுதை போக்கி விட்டேன். ஏனெனில் பண அட்டைகளை யாரேனும் பயன்படுத்த நேரிட்டால் பிரச்சனைகள் ஏராளம்.

மறுநாள் காலை காவல் துறையிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைந்த என்னுடைய பணப்பை அங்கு உள்ளது, வந்து வாங்கி கொள்ளும்படி அழைத்தார்கள்.

மிகவும் ஆச்சரியாமாக இருந்தது. தொலைந்த பொருள் மறுபடியும் கிடைக்கும் என நம்பிக்கை இல்லாத போது இந்த அதிர்ச்சி.

என்ன தொலைந்ததோ அதில் உள்ள பொருட்கள் அனைத்தும் அதே நிலையில். அதிர்ச்சியில் மேலும் அதிர்ச்சி. பொருட்களின் திருப்பி தந்த காவல்துறையின் உரைகள் கீழே.

 
வெள்ளிகளின் விபரங்கள்.


வெள்ளிகளை போட்டு வைக்கப்பட்ட பை.

 வங்கி அட்டைகள், அடையாள அட்டைகள் போட்டு வைக்கப்பட்ட பை.
 

ஓட்டுனர் உரிமம் (CO DL), பணப்பை போட்டு வைக்கப்பட்டுள்ள பைகள்.

இது போன்ற நிகழ்வுகளில் தான் நேர்மையான மக்கள், நேர்மையான காவல் துறையினர்களை பார்க்க முடிகிறது.  இது போன்ற நிகழ்வுகளை பார்த்தவுடன், மக்கள் மீதும், அரசு துறையினர் மீதும் அபார நம்பிக்கை வருகிறது.

மேலும், changeling படம் பார்த்தேன். உண்மையான நிகழ்வுகளை படமாக்கபட்டது. ஒரு தாய் தான் தொலைத்த குழந்தையை "லாஸ் ஏஞ்சலீஸ்" காவல் துறையிடம் புகார் செய்து எவ்வாறு சிரமப்பட்டாள் என்பது தெளிவாக தெரியும்.

திங்கள், 11 ஜனவரி, 2010

பேருந்தில் தொந்தரவு செய்தால் 3 1/2 கோடி ரூபாய் அபராதம்

தினமும் வேலைக்கு செல்வதற்கு பேருந்தில் பயணம் செய்வது வழக்கம். அனைவரும் மிக அமைதியாக வரிசையில் நின்று பேருந்தில் ஏறுவதும் எந்த வித சலனமும் இல்லாமல் பேருந்து இயங்குவது வியப்பாக இருந்தது. இவ்வாறு கட்டுபாடுடன் பேருந்து நிறுவனங்கள் எவ்வாறு நடைமுறைபடுத்துகின்றன என்று எண்ணுவதுண்டு. ஒரு நாள் பேருந்தில் உள்ள எச்சரிக்கை பலகையை பார்த்தேன், புகைப்படம் கீழே.

அதில் எழுதி இருப்பதாவது,

பேருந்தில் ஏதேனும் தொந்தரவு செய்தால் அதிகபட்சமாக 750,௦௦௦ அமெரிக்கன் வெள்ளிகள் (3 1/2 கோடி ரூபாய்) அபராதம் விதிக்கவும், 16 வருடம் சிறை தண்டனையும் அளிக்க நீதமன்றதிர்க்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சட்ட மீறல்களையும் போலீசிடம் புகார் செய்யப்படும்.

இது போன்று யாரேனும் செய்தால் எவ்வாறு ஆதாரம் காண்பிப்பார்கள் என்று நீங்கள் எண்ண நேர்ந்தால், அதன் பதில் கீழே.

மேலே உள்ள படத்தில் நிகழ படம் எடுக்கும் கருவியை பார்க்கலாம். பேருந்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இது போன்ற கருவிகள் உள்ளது.  யாரிடமாவது போய் சாட்சி கேட்க வேண்டுமா என்ன? அல்லது தவறு செய்ய யாராவது யோசிப்பார்களா என்ன?

மேலும் பேருந்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் கிரிமினல் குற்றம்.

இடம்:  ஐக்கிய அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாநிலத்தில்.

கீழே கிராமத்தில் ஒரு நாள் பயணம் செய்யும் போது எடுத்த புகைப்படம்,

இடம்:  காசாங்காட்டிலிரிந்து பட்டுக்கோட்டை சென்ற லிங்கம் என்ற சிறுபேருந்து, வளவன்புரம் அருகில்.

சனி, 2 ஜனவரி, 2010

ரஷ்மோர் குன்றும், தஞ்சை பெரியகோவிலும்

சமீபத்தில் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள "வடக்கு டக்கோட்டா" மாநிலத்திற்கு ரஷ்மோர் குன்றை பார்க்கலாம் என்று சென்றேன். அந்த குன்றின் புகைப்படம் கீழே.



மிக சிறப்பாக ஒரு மலையில் செதுக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதிகள். ஜார்ஜ் வாஷிங்டன் (1732–1799), தாமஸ் ஜெபர்சன் (1743–1826), தியோடோர்  ரூசெவேல்ட் (1858–1919) மற்றும் ஆபிரகாம் லின்கன் (1809–1865). சென்று வந்தவுடன் ஒரு அமெரிக்கர் கேட்டார், பார்க்க உங்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்ததா என்று? உண்மையில் எனக்கு ஆச்சிரியமாக இல்லை என்றேன். இவர் கேட்கும் போது எனக்கு தஞ்சை பெரிய கோவில் தான் ஞாபகத்திற்கு வந்தது. அவரிடம் சொன்னேன், காசாங்காடு கிராமதிளிரிந்து  25 மைல் தூரத்தில், பிரகதீஸ்வரர் பெரிய கோவிலில், 80 டன் எடையுள்ள பழிங்கி கல்லை செதுக்கி ஒன்பதாம் நூற்றாண்டிலே கோபுரத்தின் உச்சியில் வைத்துள்ளார்கள் என்றேன். அச்சியர்த்திர்க்கு உள்ளாகினார் அந்த அமெரிக்கர்.




நன்றி.